ஒருவரது பண்பை உணர்த்தும் அரிய தெடர் தகைமொழி எனப்படும்.
சிலப்பதிகாத்தில் கோவலனை மாடல மறையோன் பாராட்டுகிறான். கோவலனைப் பாராட்டும் தகைமொழித் தொடர்கள் இங்குக் காட்டப்பட்டுள்ளன. இவை கோவலனின் பண்புகளை உணர்த்துகின்றன.
இவற்றைப் போன்று சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே சில தகைமொழித் தொடர்கள் வருகின்றன. அவற்றைக் காண இருக்கிறோம்.
கோவலன் மாதவியிடம் தனக்குப் பிறந்த குழந்தைக்கு மணிமேகலை என்னும் பெயரைச் சூட்டித் தானம் வழங்குகிறான்.
தானம் வாங்க முதியவன் ஒருவன் வருகிறான்.
அப்போது அந்த முதியவனை யானை ஒன்று தன் கையால் பற்றுகிகிறது.
அதுகண்ட கோவலன் யானைமீது ஏறி அதனை அடக்கி முதியவனைக் காப்பாற்றுகிறான்.
இந்தச் செயலை மாடல மறையோன் கருணை மறம் என்னும் தகைமொழியால் குறிப்பிடுகிறான்.
கீரந்தை என்னும் அந்தணன் கீரிப்பிள்ளை ஒன்றை வளர்த்துவந்தன். அவன் மனைவி தண்ணீர் எடுத்துவர வெளியில் சென்றிருந்தாள். கீரந்தை வெளியில் செல்லும்போது தன் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும்படித் தான் வளர்த்த கீரிப்பிள்ளையிடம் சொல்லிவிட்டுச் சென்றான்.
அப்போது குழந்தையைக் கடிக்க நாகம் ஒன்று வந்தது. கீரி நாகத்தைக் கடித்துக் குதறிக் கொன்றது. அதனைத் தெரிவிக்க மகிழ்வுடன் வீட்டு வாயிலில் வந்து நின்றது.
தண்ணீர்க் குடத்துடன் கீரந்தை மனைவி இல்லம் திரும்பினாள். கீரியைக் கண்டாள். அது தன் குழந்தையைக் கடித்துவிட்டது என்று தவறாக எண்ணிக்கொண்டாள். தண்ணீர்க் குடத்தைக் கீரிப்பிள்ளை தலையில் போட்டு அதனைக் கொன்றாள். உள்ளே வந்து பாம்பு துண்டு பட்டுக் கிடப்பதைப் பார்த்தாள். தன் தவற்றை உணர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.
அவள் கணவன் கீரந்தை வந்தான். நிலைமையை அறிந்தான். "உன் கையில் சமைத்த உணவை உண்ணமாட்டேன்" என்று கூறி, அதனை ஒரு ஓலையில் எழுதி மனைவி கையில் கொடுத்தான். "இந்த ஓலையைக் கடமை அறிந்த ஒருவரிடம் கொடு. அவர் உன்னையும் குழந்தையையும் காப்பாற்றுவார்" என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
அவள் ஓலையைப் பலரிடம் காட்டினாள். யாரும் அவளைக் காக்க முன்வரவில்லை.
கோவலனிடம் காட்டியபோது அவள் செய்த பாவம் கழியக் கோவலன் தானம் செய்து, அவளை அவளது கணவனோடு சேர்த்து வைத்தான்.
இதனை, செல்லாச் செல்வன் என்னும் தகைமொழியால் கோவலனை மாடல மறையோன் பாராட்டுவதாகச் சிலப்பதிகாரம் கூறிகிறது.
கோபாலன் மாடு மேய்த்தவன். கோவலன் கோபாலனினும் பெரியவன். விருத்த கோபாலன்.
பத்தினி ஒருத்தி மீது ஒருவன் இல்லாததும் பொல்லாததுமான கதைகளை அவளது கணவனிடம் கூறினான்.
அதனால் காவிரிப்பூம்பட்டினத்துச் சதுக்கப் பூதம் அவனைக் கொன்றுவிட்டது. அவன் தாய் அவன் உடலுடன் பூதத்திடம் வந்தாள். தன் உயிரை எடுத்துக்கொண்டு, தன் மகன் உயிரைத் தருமாறு வேண்டினாள்.
"பாவம் செய்பவன் நரகன். நரகன் உயிருக்காக நல்ல உயிரை எடுத்துக்கொண்டால் பரகதி எனக்குக் கிடைக்காது. எனவே உன் கருத்தை விட்டுவிடு" என்று சொல்லி, அவனை அடித்துத் தின்றுவிட்டது.
உள்ளம் நொந்த அந்தத் தாய் கோவலனிடம் சென்றான். கோவலன் அந்தத் தாய்க்கும் அவளது சுற்றத்தார்க்கும், தொடர்புடைய கிளைஞர்களுக்கும் பசியைப் போக்கிப் பல ஆண்டுகள் காப்பாற்றிவந்தான்.
இது விருத்த கோபாலன் என்னும் தகைமொழியால் போற்றப்படுகிறது.
No comments:
Post a Comment