- மதிலில் சாய்த்த ஏணியில் ஏறிப் போரிடுவது பற்றிக் கூறுவது எயில் பாசி என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
சுடுமண் நெடுமதில் சுற்றிப் பிரியார்
கடு முரண் எஃகம் கழிய - அடு முரண்
ஆறினார் அன்றி அரவும் உடும்பும் போல்
ஏறினார் ஏணி பலர்
- உழிஞைப் போர் வீரர்கள் மதிலைக் கடக்க ஏணிமேல் ஏறினர்.
- மதில் வீரர்கள் வேல் வீசினர்.
- ஏறியவரில் சிலர் வீழ்ந்தனர்.
- மற்றவர்கள் பாம்பு மரத்தில் ஏறுவது போலவும், உடும்பு தம் கால்களைப் பல்லி போல் பற்றிக்கொண்டு ஏறுவது போலவும் மதிலில் ஏறினர்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 84
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment