Pages

Sunday, 15 June 2025

எயில் பாசி 6-19

  • மதிலில் சாய்த்த ஏணியில் ஏறிப் போரிடுவது பற்றிக் கூறுவது எயில் பாசி என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

சுடுமண் நெடுமதில் சுற்றிப் பிரியார் 
கடு முரண் எஃகம் கழிய - அடு முரண் 
ஆறினார் அன்றி அரவும் உடும்பும் போல் 
ஏறினார் ஏணி பலர்

  • உழிஞைப் போர் வீரர்கள் மதிலைக் கடக்க ஏணிமேல் ஏறினர். 
  • மதில் வீரர்கள் வேல் வீசினர். 
  • ஏறியவரில் சிலர் வீழ்ந்தனர். 
  • மற்றவர்கள் பாம்பு மரத்தில் ஏறுவது போலவும், உடும்பு தம் கால்களைப் பல்லி போல் பற்றிக்கொண்டு ஏறுவது போலவும் மதிலில் ஏறினர். 

உழிஞைப்படலம் / உழிஞைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment