Pages

Saturday, 14 June 2025

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

தொல்காப்பிம் தமிழ் மொழியைப் பற்றிக் கூறும் நூல். இது மூன்று பகுதிகளாக உள்ளது. 

தமிழிலுள்ள எழுத்துகள், அவற்றின் ஒலி, அவை பொருள் உணர்த்தும் சொற்களாக உருப் பெற்று ஒன்றோடொன்று சேரும் (புணரும்) பாங்கு ஆகியவற்றை முதல் பகுதி உணர்த்துகின்றது. 

மொழியில் சொற்கள் இணையும் பாங்கை இரண்டாம் பகுதி சொல்கிறது.

மூன்றாம் பகுதி மொழியில் உள்ள நூல்களின் அமைதிப் பாங்கைப் பேசுகிறது. 

இதில் செய்யுள், உவமை, மொழி மரபு ஆகியவற்றைச் சொல்வது மொழிநிலை. அகம், புறம், களவு, கற்பு என்றெல்லாம் பேசுவது வாழ்வியல். மற்றொரு பகுதி உணர்ச்சி வெளிப்பாட்டைப் பற்றிப் பேசுகிறது. 

வாழ்வியலும், உணர்ச்சி வெளிப்பாடும் வாழ்க்கை விளக்கம். 

மரபைக்  கூறுகையில் சில இடைச்செருகல்களும் உள்ளன. நால்வகை இனம், அந்தந்த இனத்தவருக்கு உரிய சில பொருள்கள், அவர்களின் தொழில் பற்றிக் கூறும் பகுதிகள் பொருத்தம் இல்லாமல் இணைக்கப்பட்டுள்ளதை ஊன்றிப் படிப்பவர் உணர்ந்துகொள்ள முடியும். நூல், உத்தி முதலானவற்றில் கூறப்படுவன மொழியியல் இடைச்செருகல்கள்.   

No comments:

Post a Comment