Pages

Saturday, 14 June 2025

ஏணி நிலை 6-18

  • மதிலில் ஏணி சாத்தி ஏறிப் போரிடுவது பற்றிக் கூறுவது ஏணி நிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

கல் பொறியும் பாம்பும் கனலும் கடி குரங்கும் 
வில் பொறியும் வேலும் விலக்கவும் - பொற்புடைய 
பாணி நடைப் புரவி பல் களிற்றார் சாத்தினார் 
ஏணி பலவும் எயில். 


  • கல் எறியும் பொறி, தொட்டால் பற்றிக்கொள்ளும் தீ, பாம்புகள், கடிக்கும் குரங்குகள், அம்பை எய்யும் வில்லுப் பொறி, தானே பாயும் வேல் முதலானவை மதில் சுவரில் வைக்கப்பட்டிருந்தன. 
  • குதிரையிலும், யானை மேலும் வந்து கோட்டையைக் கைப்பறும் உழிஞை வீரர் அந்தக் கோட்டை மதில் மேல் ஏணி சாத்தினர்.  


உழிஞைப்படலம் / உழிஞைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment