- மதிலில் ஏணி சாத்தி ஏறிப் போரிடுவது பற்றிக் கூறுவது ஏணி நிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
கல் பொறியும் பாம்பும் கனலும் கடி குரங்கும்
வில் பொறியும் வேலும் விலக்கவும் - பொற்புடைய
பாணி நடைப் புரவி பல் களிற்றார் சாத்தினார்
ஏணி பலவும் எயில்.
- கல் எறியும் பொறி, தொட்டால் பற்றிக்கொள்ளும் தீ, பாம்புகள், கடிக்கும் குரங்குகள், அம்பை எய்யும் வில்லுப் பொறி, தானே பாயும் வேல் முதலானவை மதில் சுவரில் வைக்கப்பட்டிருந்தன.
- குதிரையிலும், யானை மேலும் வந்து கோட்டையைக் கைப்பறும் உழிஞை வீரர் அந்தக் கோட்டை மதில் மேல் ஏணி சாத்தினர்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 84
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment