- நுகத்தின் பகலாணி போல் நடுவுநிலைமை தவறாத மன்னன் சிறப்பு பற்றிக் கூறுவது அரச வாகை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
காவல் அமைந்தான் கடல் உலகம் காவலால்
ஓவல் அறியாது உயிர்க்கு உவகை - மேவரும் சீர்
ஐந்தொழில் நால்மறை முத்தீ இருபிறப்பு
வெந்திறல் தண்ணளி எம் வேந்து.
- வேந்தன் 5 தொழிலை மேற்கொண்டு செயல்படும் சிறப்பினை உடையவன்.
- (ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிர் ஓம்பல் - ஆகியவை 5 தொழில்).
- 4 மறைகளையும் உணர்ந்தவன்.
- 3 தீ வளர்ப்பவன்.
- பூணூல் இருவதற்கு முன்னும் பின்னும் என்று 2 பிறப்பு கொண்டவன்.
- பகைவரிடம் வௌவிய பொருளைப் பிறருக்கு அளிப்பவன். அவன் கடல் சூழ்ந்த உலகைக் காப்பாற்றி, ஓய்வின்றி உலகைக் காப்பதில் உவகை கொண்டவன்.
வாகைப்படலம் / வாகைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 105
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment