- அரசனின் பலி பெறும் முரசம் பற்றிச் சிறப்பித்துக் கூறுவது முரச வாகை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
மதி ஏர் நெடும் குடை மன்னர் பணிந்து
புதிய புகழ் மாலை வேய - நிதியம்
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள்
முழங்கும் அதிரும் முரசு.
- வேந்தன் நிதியம் வழங்கும் தடக்கை கொண்டவன். குடை மன்னர் பணிந்து புதிது புதிதாகப் போற்றும் புகழ்மாலை அணிந்தவன். அவன் நகரத்தில் அவன் கொடையைப் பெற அழைக்கும் முரசம் முழங்கும்.
வாகைப்படலம் / வாகைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 105
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment