Pages

Sunday, 22 June 2025

முரச வாகை 8-4

  • அரசனின் பலி பெறும் முரசம் பற்றிச் சிறப்பித்துக் கூறுவது முரச வாகை என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

மதி ஏர் நெடும் குடை மன்னர் பணிந்து 
புதிய புகழ் மாலை வேய - நிதியம் 
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள் 
முழங்கும் அதிரும் முரசு. 

  • வேந்தன் நிதியம் வழங்கும் தடக்கை கொண்டவன். குடை மன்னர் பணிந்து புதிது புதிதாகப் போற்றும் புகழ்மாலை அணிந்தவன். அவன் நகரத்தில் அவன் கொடையைப் பெற அழைக்கும் முரசம் முழங்கும்.

வாகைப்படலம் / வாகைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment