- வாகை மலரால் ஆன வெள்ளை நிறக் கண்ணி, கருமை நிற இருபாலான வீரக் கழல், சிவப்பு நிறக் கச்சு ஆகியவற்றை வீரர் போருக்காக அணிவது பற்றிக் கூறுவது வாகை அரவம் என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
அனைய அமருள் அயில் போழ் விழுப் புண்
இனைய இனிக் கவலை இல்லை - புனைக
அழலோடு இமைக்கும் அணங்கு உடைவாள் மைந்தர்
கழலோடு பூங்கண்ணி கச்சு.
- வேல் பிளக்கும் விழுப்புண் படும் போர். அந்நதப் போருக்காக மைந்தர் உடைவாள், கழல், கண்ணி, கச்சு ஆகியவற்றைப் புனைகின்றனர். இனிக் கவலை இல்லை. வெற்றிதான்.
வாகைப்படலம் / வாகைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 104
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment