- வாகை மலரைச் சூடிகொண்டு தன்னோடு மாறுபட்ட வேந்தனைக் கொன்று ஆரவாரம் செய்வது வாகைத் திணை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
சூடினான் வாகைச் சுடர்த் தெரியல் சூடுதலும்
பாடினார் வெல் புகழைப் பல் புலவர் - கூடார்
உடல் வேல் அழுவத்து ஒளி திகழும் பைம்பூண்
அடல் வேந்தன் அட்டு ஆர்த்து அரசு.
- பைம்பூண் வேந்தன். அவன் அடல் வேந்தன். வாகைப் பூ மாலையைச் சூடினான். அந்தச் சுடர் மாலையைச் சூடியதும், உடலும் வேலும் நிற்கும் களத்தில் அவன் வென்றான் என்று புலவர் பலரும் அவனைப் பாராட்டிப் பாடினர்.
வாகைப்படலம் / வாகைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 104
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
![]() |
வாகை |
No comments:
Post a Comment