Pages

Sunday, 22 June 2025

வாகைத் திணை 8-1

  • வாகை மலரைச் சூடிகொண்டு தன்னோடு மாறுபட்ட வேந்தனைக் கொன்று ஆரவாரம் செய்வது வாகைத் திணை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

சூடினான் வாகைச் சுடர்த் தெரியல் சூடுதலும் 
பாடினார் வெல் புகழைப் பல் புலவர் - கூடார் 
உடல் வேல் அழுவத்து ஒளி திகழும் பைம்பூண் 
அடல் வேந்தன் அட்டு ஆர்த்து அரசு. 

  • பைம்பூண் வேந்தன். அவன் அடல் வேந்தன். வாகைப் பூ மாலையைச் சூடினான். அந்தச் சுடர் மாலையைச் சூடியதும், உடலும் வேலும் நிற்கும் களத்தில் அவன் வென்றான் என்று புலவர் பலரும் அவனைப் பாராட்டிப் பாடினர். 

வாகைப்படலம் / வாகைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
வாகை


No comments:

Post a Comment