- முன்னே வரும் தார்ப்படையை (தூசிப்படையை) நான் ஒருவனாகவே தடுப்பேன் என்று வீரன் ஒருவன் தும்பை மன்னனிடம் கூறுதல் தார் நிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
உறு சுடர் வாளோடு ஒருகால் விலங்கின்
சிறு சுடர் முன் பேர் இருளாம் கண்டாய் - எறி சுடர் வேல்
தேம் குலாம் பூம் தெரியல் தேர் வேந்தே நின்னோடு
பாங்கு அலா மன்னர் படை.
- என் வாள் பெரிய சுடர் போன்றது. பகைவர் படையை ஒருமுறை நான் தடுத்தால், சிறிய விளக்கின் முன் மிகப்பெரிய இருள் விலகுவது போல உன் பக்கம் இல்லாத பகை மன்னன் படை விலகி ஓடும்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 94
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment