- ஒரு அரசனை, பல அரசர்கள் சேர்ந்து தாக்குவது பற்றிக் கூறினாலும் அது தார் நிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
காலால் மயங்கிக் கதிர் மறைத்த கார் முகில் போல்
வேலான் கை வேல் பட வீழ்ந்தனவே - தோலா
இலை புனை தண் தார் இறைவன் மேல் வந்த
மலை புரை யானை மரிந்து.
- மேகம் காற்றால் மயங்கி அலையும். கதிரவனை மறைக்கும். அதுபோல பகைவரின் மலை போன்ற யானைகள் தும்பை மன்னனை மறைக்கும். அவை தும்பை வீரன் கை வேல் பட்டுச் சாகும்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 94
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment