Pages

Thursday, 19 June 2025

தார் நிலை (2) 7-9

  • ஒரு அரசனை, பல அரசர்கள் சேர்ந்து தாக்குவது பற்றிக் கூறினாலும் அது தார் நிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

காலால் மயங்கிக் கதிர் மறைத்த கார் முகில் போல் 
வேலான் கை வேல் பட வீழ்ந்தனவே - தோலா
இலை புனை தண் தார் இறைவன் மேல் வந்த 
மலை புரை யானை மரிந்து. 

  • மேகம் காற்றால் மயங்கி அலையும். கதிரவனை மறைக்கும். அதுபோல பகைவரின் மலை போன்ற யானைகள் தும்பை மன்னனை மறைக்கும். அவை தும்பை வீரன் கை வேல் பட்டுச் சாகும். 

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment