- தும்பை மன்னன் தேரின் சிறப்பினைக் கூறுவது தேர் மறம் என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
செரு மலி வெம் களத்ததுச் செங்குருதி வெள்ளம்
அரு முரண் ஆழி தொடர - வருமரோ
கள் தார் கமழ் தெரியல் காவலன் காமர் தேர்
ஒட்டார் புரத்தின் மேல் ஊர்ந்து.
- தும்பைப் போரைத் தொடுக்கும் காவலன் தேன் மணக்கும் மாலை அணிந்தவன். அவனோடு ஒட்டாதவர் ஊரில் அவன் தேர் ஊர்ந்து செல்லும். குருதி பாயும் போர்க்கள வெள்ளத்தில் அதன் சக்கரம் உருளும்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 95
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment