- தும்பை வீரன் போர்க்களத்தில் பகைவனின் யானையை வீழ்த்திப் பட்ட வீரத்தைப் பாணன் தன் யாழை மீட்டிக்கொண்டு பாராட்டுவதைக் கூறுவது பாண் பாட்டு என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
தளரிய தாய் புதல்வர் தாம் உணராமைக்
களரிக் களன் முழங்க மூட்டி - விளரிப் பண்
கண்ணினார் பாணர் களிறு எறிந்து வீழ்ந்தார்க்கு
விண்ணினார் செய்தார் விருந்து.
- தும்பை வீரன் பகைவனின் போர் யானையை வீழ்த்தினான். அப்போது போர்களத்தில் வீழ்ந்துபட்டான். அது அவன் மனைவி, தாய், மக்கள் யாருக்கும் தெரியாது. அவன் பட்ட வீரச் செய்தியைப் போர்க்கத்தில் பாணன் பாடினான். யாழை மீட்டிக்கொண்டு விளரிப் பண் பாடினான். பட்டவனுக்கு வானவர் விருந்து அளித்தனர்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 95
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment