Pages

Thursday, 19 June 2025

இருவரும் தபு நிலை 7-12

  • இருதிறப் படைகளும் போர்க்ககளத்தில் மாண்டதால் இரண்டு மன்னர்களும் போரிட்டுப் போர்க்களத்தில் மாண்ட நிலையினைச் சொல்வது இருவரும் தபு நிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

காய்ந்து கடும் களிறு கண் கனலக் கை கூடி
வேந்தர் இருவரும் விண் படர - ஏந்து 
பொருபடை மின்னப் புறங்கொடாப் பொங்கி
இரு படையும் நீங்கா இகல். 

  • இரு வேந்தரின் போர் யானைகளும் சினத்துடன் மோதிக்கொண்டன. அவற்றின்மீது இருந்த இரண்டு வேந்தர்களும் மாண்டனர். அதனால் அவர்களின் படைகளும் புறங்கொடாமல் போரிட்டு மாண்டன. 

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment