- இருதிறப் படைகளும் போர்க்ககளத்தில் மாண்டதால் இரண்டு மன்னர்களும் போரிட்டுப் போர்க்களத்தில் மாண்ட நிலையினைச் சொல்வது இருவரும் தபு நிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
காய்ந்து கடும் களிறு கண் கனலக் கை கூடி
வேந்தர் இருவரும் விண் படர - ஏந்து
பொருபடை மின்னப் புறங்கொடாப் பொங்கி
இரு படையும் நீங்கா இகல்.
- இரு வேந்தரின் போர் யானைகளும் சினத்துடன் மோதிக்கொண்டன. அவற்றின்மீது இருந்த இரண்டு வேந்தர்களும் மாண்டனர். அதனால் அவர்களின் படைகளும் புறங்கொடாமல் போரிட்டு மாண்டன.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 96
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment