Pages

Thursday, 19 June 2025

எருமை மறம் 7-13

  • தன் படை திரும்பி ஓடும்போது தனி ஒருவன் ஓடாமல் நின்று பகைவரைத் தாக்குவது எருமை மறம் என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

கடுங்கண் மறவன் கனல் விழியாச் சீறி 
நெடுங்கைப் பிணத்திடை நின்றான் - நடுங்கு அமருள் 
ஆள் வெள்ளம் போகவும் போகான் கை வேல் ஊன்றி
வாள் வெள்ளம் தன் மேல் வர. 

  • அவன் வீர மறவன். தீயைப் போன்று சீறும் கண்ணுடன் நின்றான். யானைப் பிணங்களுக்கு இடையே போர்க்களத்தில் நின்றான். அவனுடன் வந்த காலாள் படை திரும்பிற்று. அவன் திரும்பவில்லை. வாளை ஊன்றிக்கொண்டு நின்றான். வாள் வீரர்கள் தாக்க வந்தனர். அதனை அவன் பொருட்படுத்தவில்லை.    

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment