Pages

Thursday, 19 June 2025

ஏம எருமை 7-14

  • குடை மன்னனைப் பாதுகாக்கும் வாள் படை வீரர்களைக் கடந்து சென்று தன் வேலை எறிந்து பகையரசன் யானையைத் தனியொருவன் வீழ்த்தியது பற்றிச் சொல்வது ஏம எருமை என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

மருப்புத் தோள் ஆக மதர் விடையின் சீறி 
செருப் புகன்று செங்கண் மறவன் - நெருப்பு இமையாக் 
கை கொண்ட எஃகம் கடும் களிற்றின் மேல் போக்கி 
மெய்க் கொண்டான் பின்னரும் மீட்டு. 

  • அவன் செங்கண் மறவன். நெருப்பைப் போல் பார்த்தான். கையில் இருந்த வேலைப் பகையரசன் களிற்றின் மேல் வீசினான். அது அந்தக் களிற்றைச் சாய்த்தது. இப்போது அவன் கையில் படைக்கருவி எதுவும் இல்லை. எனவே தன் தோளால் முட்டிப் போரிட்டான். காளை கொம்பால் முட்டிப் போரிடுவது போலப் போரிட்டான். வென்றான். 

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment