- வேந்தர் படையைக் கொன்று தன் வேலைச் சுழற்றிக்கொண்டு ஆடும் வீரனைப் பற்றிச் சொல்வது நூழில் என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
ஆடல் அமர்ந்தான் அமர் வெய்யோன் வீழ் குடர்
சூடல் மலைந்த சுடர்க் கண் பேய் - மீடல்
மறந்த வேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம்
திறந்த வேல் கையில் திரித்து.
- அவன் போரை விரும்பும் சூரியன். குடல் மாலை போட்டுக்கொண்டு சுடர்க்கண் பேய் மீளாத போர். வேல் விளையாடும் போர். அவன் போர் வீரர்களின் மார்பைத் திறந்த தன் வேலைக் கையில் சுழற்றிக்கொண்டு போர்களத்தில் ஆடினான்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 97
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment