Pages

Thursday, 19 June 2025

நூழில் 7-15

  • வேந்தர் படையைக் கொன்று தன் வேலைச் சுழற்றிக்கொண்டு ஆடும் வீரனைப் பற்றிச் சொல்வது நூழில் என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

ஆடல் அமர்ந்தான் அமர் வெய்யோன் வீழ் குடர்
சூடல் மலைந்த சுடர்க் கண் பேய் - மீடல் 
மறந்த வேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம் 
திறந்த வேல் கையில் திரித்து. 

  • அவன் போரை விரும்பும் சூரியன். குடல் மாலை போட்டுக்கொண்டு சுடர்க்கண் பேய் மீளாத போர். வேல் விளையாடும் போர். அவன் போர் வீரர்களின் மார்பைத் திறந்த தன் வேலைக் கையில் சுழற்றிக்கொண்டு போர்களத்தில் ஆடினான்.  

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment