- தன் மார்பில் பாய்ந்த வேலைப் பிடுங்கிப் பகைவன் மேல் எறிந்தது பற்றிக் கூறுவது நூழில் ஆட்டு என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
மொய்யகத்து மன்னர் முரண் இனி என் ஆம் கொல்
கையகத்துக் கொண்டான் கழல் விடலை - வெய்ய
விடு சுடர் சிந்தி விரை அகலம் போழ்ந்த
படு சுடர் எஃகம் பறித்து.
- வீரக் கழல் அணிந்த அந்த விடலை தன் மார்பில் பாய்ந்த வேலைப் பறித்துக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறான். போர்க்களத்தில் மொய்க்கும் முரண்பாடு இனி என்ன ஆகும்? (அவனுக்கு வெற்றியை உண்டாக்கும்).
மெய் வேல் பறியா நகும். (திருக்குறள்)
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 97
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment