- போருக்குச் செல்லும் அரசன் தேருக்கு முன்னே வீரர்கள் குரவைக் கூத்து ஆடுவதைக் கூறுவது முன்தேர்க் குரவை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
ஆனா வயவர் முன் ஆட அமர்க்களத்து
வானார் மின்னாகி வழி நுடங்கும் - நோனாக்
கழு மணிப் பைம்பூண் கழல் வேந்தன் ஊரும்
குழு மணித் திண் தேர்க் கொடி.
- போர்களத்தில் அரனின் தேர் செல்லும்போது அதன் முன்னே வயவர் (போர்வீரர்கள்) வானத்து மின்னல் போல் வழி விலக்கிக்கொண்டு ஆடுவர். அவர்கள் ஆடுவது போல் அரசனின் தேரிலுள்ள அவன் கொடியும் ஆடும்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 98
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment