- போருக்குச் செல்லும் அரசன் தேருக்குப் பின்னே மறவரோடு சேர்ந்து விறலியர் குரவை ஆடிக்கொண்டு செல்லல் பின்தேர்க் குரவை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
கிளை ஆய்ந்து பண்ணிய கேள்வி யாழ் பாணும்
வளையா வயவரும் பின்னாக் - கொளை ஆய்ந்து
அசை விளங்கும் பாடலோடு ஆட வருமே
திசை விளங்கும் தானையான் தேர்.
- பாணனும் பாடினியும் யாழில் பண் மீட்டும்போது கிளை என்னும் நரம்பினை ஆராந்து மீட்டுவர். அவர்கள் அவ்வாறு மீட்டி இசை பாடிக்கொண்டு ஆட, அவர்களோடு உடல் வலிமையுள்ள வயவரும் சேர்ந்து ஆடிக்கொண்டு வர, அரசனின் தேர் போருக்குச் சென்றது.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 98
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment