- மன்னன் போருக்குச் செல்லும் தேரின் முன்னும், பின்னும் பிணம் தின்னும் பேய்கள், குரவை ஆடுவது பற்றிக் கூறுவது பேய்க் குரவை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
முன்னரும் பின்னரும் மூரிக் கடல் தானை
மன்னன் நெடுந்தேர் மறன் ஏத்தி - ஒன்னார்
நிணம் கொள் வாய நிழல் போல் நுடங்கிக்
கணம் கொள் பேய் ஆடும் களித்து.
- போருக்குச் செல்லும் மன்னனின் வீரத்தைப் புகழ்ந்து பாடிக்கொண்டு, பிணக்கொழுப்பைத் தின்னும் பேய்கள், அவன் போருக்குச் செல்லும் தேரின் முன்னும் பின்னும் களிப்புடன் ஆடிக்கொண்டு நிழல் போல் செல்லும்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 98
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment