- வேல் வீச்சில் சாயும் போர்க்களிற்றின்கீழ்ப் பட்டு இறந்தது பற்றிக் கூறுவது களிற்றுடனிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
இறுவரை வீழ இயக்கு அற்று அவிந்த
தறுகண் தகைமை அரிமாப் போன்றான் - சிறுகண்
பெருங்கைக் களிறு எறிந்து பின் அதன் கீழ்ப் பட்ட
கருங்கழல் செவ்வேலவன்.
- அவன் தன் வேலைப் போரிடும் யானை மேல் வீசினான். அது சாய்ந்தது. அப்போது அந்த யானைக்குக் கீழ் அகப்படு அவன் மாண்டான்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 99
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment