Pages

Friday, 20 June 2025

ஒள்வாளமலை 7-21

  • போருக்காக வீரக் கழல் அணிந்த மன்னனுடன் தோள் வலிமை மிக்க வாள் வீரன் ஆடும் ஆரவாரம் பற்றிக் கூறுவது ஒள்வாள் அமலை என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

வாளை பிறழும் கயம் கடுப்ப வந்து அடையார் 
ஆளமர் வென்றி அடு களத்துத் - தோள் பெயராக்
காய்ந்து அடு துப்பின் கழல் மறவர் ஆடினார் 
வேந்து அடு வெள் வாள் விதிர்த்து. 

  • வெற்றி கண்ட போர்க்களத்தில், குளத்தில் வாளைமீன் பிறழ்வது போல, பகையரசனை வீழ்த்திய வாளைச் சுழற்றிக்கொண்டு, மறவர் ஆடினர்.

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment