- போருக்காக வீரக் கழல் அணிந்த மன்னனுடன் தோள் வலிமை மிக்க வாள் வீரன் ஆடும் ஆரவாரம் பற்றிக் கூறுவது ஒள்வாள் அமலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
வாளை பிறழும் கயம் கடுப்ப வந்து அடையார்
ஆளமர் வென்றி அடு களத்துத் - தோள் பெயராக்
காய்ந்து அடு துப்பின் கழல் மறவர் ஆடினார்
வேந்து அடு வெள் வாள் விதிர்த்து.
- வெற்றி கண்ட போர்க்களத்தில், குளத்தில் வாளைமீன் பிறழ்வது போல, பகையரசனை வீழ்த்திய வாளைச் சுழற்றிக்கொண்டு, மறவர் ஆடினர்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 99
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment