- இரு திறப் படைகளும் போரிடுவது பற்றிக் கூறுவது தானை நிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
நேரார் படையின் நிலைமை நெடுந்தகை
ஓரான் உறை கழியான் ஒள் வாளும் - தேரார்க்கும்
வெம் பரி மா ஊர்ந்தார்க்கும் வெல் களிற்றின் மேலார்க்கும்
கம்பமா நின்றான் களத்து.
- போரிட வந்த நெடுந்தகை, பகைவர் படையின் நிலைமையை நினைத்துப் பார்க்காமல், தேர். குதிரை, யானைப் படைவீரர் முன், தன் வாளையும் உறையிலிருந்து எடுக்காமல், கம்பம் போல நின்றான். (கம்பம் = நடுக்கமும் ஆம்)
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 100
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment