Pages

Saturday, 21 June 2025

தானை நிலை 7-22

  • இரு திறப் படைகளும் போரிடுவது பற்றிக் கூறுவது தானை நிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

நேரார் படையின் நிலைமை நெடுந்தகை
ஓரான் உறை கழியான் ஒள் வாளும் - தேரார்க்கும் 
வெம் பரி மா ஊர்ந்தார்க்கும் வெல் களிற்றின் மேலார்க்கும் 
கம்பமா நின்றான் களத்து. 

  • போரிட வந்த நெடுந்தகை, பகைவர் படையின் நிலைமையை நினைத்துப் பார்க்காமல், தேர். குதிரை, யானைப் படைவீரர் முன், தன் வாளையும் உறையிலிருந்து எடுக்காமல், கம்பம் போல நின்றான். (கம்பம் = நடுக்கமும் ஆம்)

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment