- அம்பு பாய்ந்த வீரனின் உடல் மண்ணில் படாமல் அம்பில் நிற்கும் நிலையைக் கூறுவது வெருவருநிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
வெங்கண் முரசு அதிரும் வேல் அமருள் வில் உதைப்ப
எங்கும் மருமத்து இடைக் குளிப்பச் - செங்கண்
புல வாள் நெடுந்தகை பூம் பொழில் ஆகம்
கலவாமல் காத்த கணை.
- அது முரசு முழங்கத்துடன் வேல் வீசும் போர். அதில் அவன் வாள் வீர நெடுந்தகை. அவன் மார்பு அம்பு நீரில் குளித்திருக்கிறது. அந்த அம்புகள் அவன் உடம்பை மண்ணில் படாதபடி நிறுத்தியிருக்கின்றன.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 100
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment