- பகைவர் புகழும்படி, போர்க்களத்தில் மார்பில் புண் பட்டுக் கிடப்பவனை மகளிர் தழுவிவது பற்றிக் கூறுவது சிருங்கார நிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
எம் கணவன் எம் கணவன் என்பார் இகல் வாடத்
தம் கணவன் தார் தன் முலை நனைப்ப - வெம் கணை சேர்
புண்ணுடை மார்பம் பொருகளத்துப் புல்லினார்
நுண் இடைப் பேர் அல்குலார்.
- "இவன்எம் கணவன் எம் கணவன்" என்று சொல்லிக்கொண்டு மகளிர் புண் பட்டுக் கிடக்கும் போர்வீரனைத் தழுவினர்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 101
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment