- வாளால் வெட்டப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கும் தன் கணவன் உடலைக் கண்டு மனைவி வீர உணர்வில் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்துவது பற்றிக் கூறுவது உவகைக் கலுழ்ச்சி என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
வெம் தொழில் கூற்றமும் நாணின்று வெம் களத்து
வந்த மறவர் கை வாள் துமிப்ப - பைந்தொடி
ஆடல் அரிமா அன்னான் கிடப்ப அகத்து உவகை
ஓடு அரிக் கண் நீர் பாய் உக.
- அவன் போரில் விளையாடும் சிங்கம் போன்றவன். அந்த மறவன் உடல் வாளால் துண்டாடப்பட்டுப் போர்க்களத்தில் கிடப்பதைப் பார்த்து, கூற்றமும், தன்னால் கொல்லப்படவில்லை என்று நாணிற்று. அதனைக் கண்ட அவன் மனைவி கண்ணீர் உகுத்தாள். அது அவள் வீர உணர்வில் தோன்றிய ஆனந்தக் கண்ணீர்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 101
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment