Pages

Saturday, 21 June 2025

தன்னை வேட்டல் 7-26

  • தன் அரசன் போரில் இறந்தான் என்பதற்காக வீரன் ஒருவன் வீராவேசத்துடன் போரிட்டுத் தன் உயிரை மாய்த்துக்கொள்வது பற்றிக் கூறுவது தன்னை வேட்டல் என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

வானம் இறைவன் படர்ந்து என வாள் துடுப்பா
மானமே நெய்யா மறம் விறகா - தேன் இமிரும் 
கள் அவழ் கண்ணிக் கழல் வெய்யோன் வாள் அமர் 
ஒள் அழலுள் வேட்டான் உயிர். 

  • தன் அரசன் போரில் இறந்தான் என்பதற்காக, 
  • அந்த வீரக் கழல் அணிந்த வீரன், 
  • போரில் தன் வாளைத் துடுப்பு ஆக்கி, 
  • தன் மான உணர்வை நெய் ஆக்கி, 
  • தன் மறத்தை விறகு ஆக்கி, 
  • போர்த் தீயில் 
  • தன் உயிரை வேள்வி செய்தான். 

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment