- தன் அரசன் போரில் இறந்தான் என்பதற்காக வீரன் ஒருவன் வீராவேசத்துடன் போரிட்டுத் தன் உயிரை மாய்த்துக்கொள்வது பற்றிக் கூறுவது தன்னை வேட்டல் என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
வானம் இறைவன் படர்ந்து என வாள் துடுப்பா
மானமே நெய்யா மறம் விறகா - தேன் இமிரும்
கள் அவழ் கண்ணிக் கழல் வெய்யோன் வாள் அமர்
ஒள் அழலுள் வேட்டான் உயிர்.
- தன் அரசன் போரில் இறந்தான் என்பதற்காக,
- அந்த வீரக் கழல் அணிந்த வீரன்,
- போரில் தன் வாளைத் துடுப்பு ஆக்கி,
- தன் மான உணர்வை நெய் ஆக்கி,
- தன் மறத்தை விறகு ஆக்கி,
- போர்த் தீயில்
- தன் உயிரை வேள்வி செய்தான்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 101
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment