Pages

Saturday, 21 June 2025

தன்னை வேட்டல் (2) 7-27

  • போர்க்களத்தில் பட்ட தன் கணவன் உடலை மனைவி தேடிக்கொண்டு செல்வதும் தன்னை வேட்டல் என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

கற்பின் விழுமியது இல்லை கடை இறந்து 
இற் பிறப்பு நாணும் இடை ஒழிய - நற் போர் 
அணங்கிய வெம் களத்து ஆர் உயிரைக் காண்பான் 
வணங்கு-இடை தானே வரும்.

  • அவள் வளைந்தாடும் இடையினள். 
  • அவளுக்குக் கற்பைக் காட்டிலும் சிறந்த பொருள் வேறு இல்லை
  • கணவன் போரில் இறந்த பின்னர் தனியே இல்லத்தில் வாழ விரும்பவில்லை  
  • போர்களம் வருகிறாள். 
  • கணவன் உடலில் உயிர் ஊசலாடுகிறதா என்று தேடுகிறாள்.
  • அவனோடு மாய்வது அவள் எண்ணம். 

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment