- போர்க்களத்தில் பட்ட தன் கணவன் உடலை மனைவி தேடிக்கொண்டு செல்வதும் தன்னை வேட்டல் என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
கற்பின் விழுமியது இல்லை கடை இறந்து
இற் பிறப்பு நாணும் இடை ஒழிய - நற் போர்
அணங்கிய வெம் களத்து ஆர் உயிரைக் காண்பான்
வணங்கு-இடை தானே வரும்.
- அவள் வளைந்தாடும் இடையினள்.
- அவளுக்குக் கற்பைக் காட்டிலும் சிறந்த பொருள் வேறு இல்லை
- கணவன் போரில் இறந்த பின்னர் தனியே இல்லத்தில் வாழ விரும்பவில்லை
- போர்களம் வருகிறாள்.
- கணவன் உடலில் உயிர் ஊசலாடுகிறதா என்று தேடுகிறாள்.
- அவனோடு மாய்வது அவள் எண்ணம்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 102
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment