Pages

Saturday, 21 June 2025

தொகைநிலை 7-28

  • புகழை நிலைநாட்டிக்கொண்டு எல்லாரும் போரில் மாண்டது பற்றிக் கூறுவது தொகைநிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

மண்டு அமர் திண் தோள் மறம் கடைஇ மண் புலம்பக் 
கண் திறள் வேல் மன்னர் களம் பட்டார் -  பெண்டிர் 
கடிது எழு செந்தீக் கழுமினார் இன்னும் 
கொடிதேகாண் ஆர்ந்தின்று கூற்று. 

  • பகைத்துக்கொண்ட இரண்டு மன்னனர்களும் போர்க்கருவி இல்லாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு போர்களத்தில் மாண்டனர். அவர்களின் மனைவிமார்களும் தீயை மூட்டி அதில் விழுந்து மாண்டனர். இத்தனை உயிர்களைக் கொன்ற பின்னரும் எமனுக்கு வயிற்றுப் பசி அடங்கவில்லை.

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment