- புகழை நிலைநாட்டிக்கொண்டு எல்லாரும் போரில் மாண்டது பற்றிக் கூறுவது தொகைநிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
மண்டு அமர் திண் தோள் மறம் கடைஇ மண் புலம்பக்
கண் திறள் வேல் மன்னர் களம் பட்டார் - பெண்டிர்
கடிது எழு செந்தீக் கழுமினார் இன்னும்
கொடிதேகாண் ஆர்ந்தின்று கூற்று.
- பகைத்துக்கொண்ட இரண்டு மன்னனர்களும் போர்க்கருவி இல்லாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு போர்களத்தில் மாண்டனர். அவர்களின் மனைவிமார்களும் தீயை மூட்டி அதில் விழுந்து மாண்டனர். இத்தனை உயிர்களைக் கொன்ற பின்னரும் எமனுக்கு வயிற்றுப் பசி அடங்கவில்லை.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 102
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment