- குதிரைப் படையின் திறம் பற்றிச் சொல்வது குதிரை மறம் என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
குந்தம் கொடுவில் குருதி வேல் கூடாதார்
வந்த வகை அறியா வாள் அமருள் - வெந்திறல்
ஆர் கழல் மன்னன் அலங்கு உளை மா வெம் சிலை
வார் கணையின் முந்தி வரும்.
- குந்தம், வில், வேல், வாள் படைகள் தாக்கிக்கொள்ளும் போரில் தும்பை மன்னன் குதிரை பாயும் அம்பைக் காட்டிலும் விரைவாகச் செல்லும்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 94
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment