- முழங்கும் கடல் போன்ற படை கொண்ட அரசன் தன் மழ (இளம்) களிற்றின் வீரம் பற்றிச் சொல்வது யானை மறம் என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
அடக்கரும் தானை அலங்கு தார் மன்னர்
விடக்கும் உயிரும் மிசைய - கடல் படையுள்
பேயும் எருவையும் கூற்றும் தன் பின் படரக்
காயும் கழலான் களிறு,
- அசைந்தாடும் மாலை அணிந்த பகை மன்னர்களின் கொழுப்பையும் உயிரையும் பிசைவதற்காகச் செல்லும் கடல் போன்ற படையில் அரசனின் சினம் கொண்ட யானை சென்றது. பேய், எருவை, கூற்று ஆகியவை அந்த யானையைப் பின் தொடர்ந்தன.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 93
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment