- தன் படையின் வீரத்தால் பகைவன் படை அழியுமே என்று இரக்கப்படுதலும் தானை மறம் என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
மின் ஆர் சினம் சொரி வேல் மீளிக் கடல் தானை
ஒன்னார் நடுங்க உலாய் நிமிரின் - என் ஆம்கொல்
ஆழித்தேர் வெல்புரவி அண்ணல் மத யானை
பாழித் தோள் மன்னர் படை.
- "கடல் போன்ற என் வேல் படை பகைவர் நடுங்குமாறு போரிட்டு உலாவினால் என் பகைவனின் தேர், யானை, குதிரை, ஆள் ஆகிய படைகள் என்ன ஆகுமோ"?
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 93
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment