போர்ப்படை
தமக்குள் மாறுபடாமல்
அரசன் பாதுகாத்தல்
பற்றிச் சொல்வது
தானை மறம் என்னும்
புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
கழுது ஆர் பறந்தலைக் கண்ணுற்றுத் தம்முள்
இழுது ஆர் தானை இகலின் - பழுதாம்
செயிர் காவல் பூண்டு ஒழுகும் செங்கோலார் செல்வம்
உயிர் காவல் என்னும் உரை
- பேய்கள் நடமாட்டம் உள்ள போர்க்களத்தில் பிணங்களைக் கண்டு போர் வீரர்கள் இரண்டு படின் வேந்தனுக்குப் பழுது உண்டாகும்.
- வேந்தன் செயிர் (குற்றம்) நேராமல் பாதுகாப்பவன்.
- செங்கோலான்.
- அவனுக்குச் செல்வம் அவன் உயிரைப் பாதுகாத்தல் - என்று உரைநூல்கள் கூறுகின்றன.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 92
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment