Pages

Wednesday, 18 June 2025

தானை மறம் 7-3

 போர்ப்படை 
தமக்குள் மாறுபடாமல் 
அரசன் பாதுகாத்தல் 
பற்றிச் சொல்வது 
தானை மறம் என்னும் 
புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

கழுது ஆர் பறந்தலைக் கண்ணுற்றுத் தம்முள் 
இழுது ஆர் தானை இகலின் - பழுதாம் 
செயிர் காவல் பூண்டு ஒழுகும் செங்கோலார் செல்வம்
உயிர் காவல் என்னும் உரை 

  • பேய்கள் நடமாட்டம் உள்ள போர்க்களத்தில் பிணங்களைக் கண்டு போர் வீரர்கள் இரண்டு படின் வேந்தனுக்குப் பழுது உண்டாகும். 
  • வேந்தன் செயிர் (குற்றம்) நேராமல் பாதுகாப்பவன். 
  • செங்கோலான். 
  • அவனுக்குச் செல்வம் அவன் உயிரைப் பாதுகாத்தல் - என்று உரைநூல்கள் கூறுகின்றன. 

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment