பொன்னால் செய்யப்பட்ட
வீரக் கழல் அணிந்த வேந்தன்
போரிடுவதற்காகத்
தன் படை வீரர்களுக்கு
விருந்து அளித்தல் (தலையளி செய்தல்)
பற்றிக் கூறுவது
தும்பை அரவம் என்னும்
புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
வெல் பொறியும் நாடும் விழுப் பொருளும் தண்ணடையும்
கொல் களிறும் மாவும் கொடுத்து அளித்தான் - பல் புரவி
நல் மணித் துண் தேர் நயவார் தலைப் பணிப்பப்
பல் மணியும் பூணான் படைக்கு.
- புரவி, மணி, தேர் கொண்ட நயவார் பணியும்படிச் செய்யப் போரிடுவதற்காக
- தோளில் பூண் வேந்தன்
- தன் படை வீரர்களுக்கு
- வெல்லும் பொறிக் கருவிகள், ஊர்கள், சிறந்த பொருள், வயல் நிலம், யானை, குதிரை முதலானவற்றைப் பரிசாக வழங்கினான்
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 91
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment