Pages

Wednesday, 18 June 2025

தும்பை அரவம் 7-2

 பொன்னால் செய்யப்பட்ட 
வீரக் கழல் அணிந்த வேந்தன் 
போரிடுவதற்காகத் 
தன் படை வீரர்களுக்கு 
விருந்து அளித்தல் (தலையளி செய்தல்) 
பற்றிக் கூறுவது 
தும்பை அரவம் என்னும் 
புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

வெல் பொறியும் நாடும் விழுப் பொருளும் தண்ணடையும் 
கொல் களிறும் மாவும் கொடுத்து அளித்தான் - பல் புரவி
நல் மணித் துண் தேர் நயவார் தலைப் பணிப்பப்
பல் மணியும் பூணான் படைக்கு. 

  • புரவி, மணி, தேர் கொண்ட நயவார் பணியும்படிச் செய்யப் போரிடுவதற்காக
  • தோளில் பூண் வேந்தன் 
  • தன் படை வீரர்களுக்கு 
  • வெல்லும் பொறிக் கருவிகள்,  ஊர்கள், சிறந்த பொருள், வயல் நிலம், யானை, குதிரை முதலானவற்றைப் பரிசாக வழங்கினான்

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment