Pages

Wednesday, 18 June 2025

தும்பைத்திணை 7-1

களத்தில் போரிடுவதற்காகத் 
தும்பைப் பூ சூடுதல் 
பற்றிக் கூறுவது 
தும்பைத்திணை என்னும் 
புறத்திணை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

கார் கருதி நின்றது இரும் கௌவை விழுப் பணையான்
சோர் குருதி சூழா நிலம் நனைப்பப் - போர் கருதித் 
துப்புடைத் தும்பை மலைந்தான் துகள் அறு சீர் 
வெப்புடைத் தானை எம் வேந்து. 

  •  எம் வேந்து மேகத்து இடி போல் முழங்கும் வீர முரசம் கொண்டவன். 
  • அவன் குருதி நிலத்தை நனைக்கும் போர்க்களத்தை விரும்பினான்.
  • அதற்காகத் தும்பைப் பூவைத் தலையில் சூடினான். 

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

தும்பை


No comments:

Post a Comment