பொய்யான அறிவு
அழுக்கு தள்ளும் உடம்பு
இந்த நீர்மைகளை இனி நான் பெறாமல் இருக்க
உயிர் தருவதற்காக
எல்லாப் பிறப்புறுப்புகளிலும் பிறந்தாய்
இமையோர் தலைவா!
மெய்மையின் பக்கமாக நின்று
நான் செய்யும் விண்ணப்பத்தைக் கேட்டருள்க.
பொய்ந்நின்று ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,
இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந்தாய் இமையோர் தலைவா.
மெய்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே.
நம்மாழ்வார் இயற்றிய திருவிருத்தம்
No comments:
Post a Comment