Pages

Sunday, 28 April 2019

குறுந்தொகை 294 Kurunthogai 294

கடலில் என்னுடன் விளையாடினான்
கானலில் என்னுடன் இருந்தான்
தொடலை மாலை அணிந்துகொண்டு விளையாட்டுத் தோழிமாரோடு தழூஉ ஆடினான்
ஏதோ புதியவன் போல வந்து என்னைத் திடீரெனத் தழுவினான்

இதனால் ஊராரின் அலர் தோன்றியது

அதன் பின்னரும் அவன் என்னை விட்டு அகலவில்லை
என் துடையை ஒட்டிக்கொண்டிருக்கும் தழையாடை போல என்னை ஒட்டிக்கொண்டிருக்கிறான்

இவற்றால் அவன் எனக்குத் தந்தது என்ன

என் தாய் என்னை எங்கும் செல்ல விடாமல் தன் அருகிலேயை காத்துக் கொண்டிருக்கும்படிச் செய்ததுதான்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment