ஒருநாள் அவன் வந்தான்
என்னைப் பார்த்துச் சிரித்தான்
அதுமுதல் என் தாய் கண்ணுறங்கவில்லை
என்னை அப்படிப் பாதுகாக்கிறாள்
அவள் நரகத்துக்குச் செல்லட்டும்
அரிவை ஒருத்தி நீராட ஆற்றுக்குச் சென்றாள்
நீரில் மிதந்து வந்த மாங்காயை எடுத்துத் தின்றுவிட்டாள்
அது அரசன் நன்னனின் காவல் மரமான மாமரத்து மாங்காய் என்று அவளுக்குத் தெரியாது
காவல் மரத்து மாங்காயை உண்ட குற்றத்துக்காக நன்னன் அவளுக்குக் கொலை தண்டனை விதித்தான்
அந்தப் பெண்ணின் உறவினர்கள்
81 யானைகளையும்
அவள் எடைக்கு எடை பொன்னையும் தண்டமாகத் தந்து அவளைத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டினர்
அதனை ஏற்றுக்கொள்ளாமல் நன்னன் அவளைக் கொலை புரிந்தான்
பெண்கொலை புரிந்த குற்றத்துக்காக நன்னன் நரகம் (நிரையம்) அடைந்தான்
பெண்ணின் இன்பத்துக்குத் தடை நிற்கும் தன் தாயும் நன்னன் போல் நரகத்துக்குச் செல்ல வேண்டும் என்பது மகள் தலைவியின் விருப்பம்
இதனைத் தலைவி தோழியிடம் சொல்கிறாள்
என்னைப் பார்த்துச் சிரித்தான்
அதுமுதல் என் தாய் கண்ணுறங்கவில்லை
என்னை அப்படிப் பாதுகாக்கிறாள்
அவள் நரகத்துக்குச் செல்லட்டும்
அரிவை ஒருத்தி நீராட ஆற்றுக்குச் சென்றாள்
நீரில் மிதந்து வந்த மாங்காயை எடுத்துத் தின்றுவிட்டாள்
அது அரசன் நன்னனின் காவல் மரமான மாமரத்து மாங்காய் என்று அவளுக்குத் தெரியாது
காவல் மரத்து மாங்காயை உண்ட குற்றத்துக்காக நன்னன் அவளுக்குக் கொலை தண்டனை விதித்தான்
அந்தப் பெண்ணின் உறவினர்கள்
81 யானைகளையும்
அவள் எடைக்கு எடை பொன்னையும் தண்டமாகத் தந்து அவளைத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டினர்
அதனை ஏற்றுக்கொள்ளாமல் நன்னன் அவளைக் கொலை புரிந்தான்
பெண்கொலை புரிந்த குற்றத்துக்காக நன்னன் நரகம் (நிரையம்) அடைந்தான்
பெண்ணின் இன்பத்துக்குத் தடை நிற்கும் தன் தாயும் நன்னன் போல் நரகத்துக்குச் செல்ல வேண்டும் என்பது மகள் தலைவியின் விருப்பம்
இதனைத் தலைவி தோழியிடம் சொல்கிறாள்
No comments:
Post a Comment