Pages

Sunday, 28 April 2019

குறுந்தொகை 292 Kurunthogai 292

ஒருநாள் அவன் வந்தான்
என்னைப் பார்த்துச் சிரித்தான்
அதுமுதல் என் தாய் கண்ணுறங்கவில்லை
என்னை அப்படிப் பாதுகாக்கிறாள்

அவள் நரகத்துக்குச் செல்லட்டும்

அரிவை ஒருத்தி நீராட ஆற்றுக்குச் சென்றாள்
நீரில் மிதந்து வந்த மாங்காயை எடுத்துத் தின்றுவிட்டாள்

அது அரசன் நன்னனின் காவல் மரமான மாமரத்து மாங்காய் என்று அவளுக்குத் தெரியாது

காவல் மரத்து மாங்காயை உண்ட குற்றத்துக்காக நன்னன் அவளுக்குக் கொலை தண்டனை விதித்தான்

அந்தப் பெண்ணின் உறவினர்கள்
81 யானைகளையும்
அவள் எடைக்கு எடை பொன்னையும் தண்டமாகத் தந்து அவளைத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டினர்

அதனை ஏற்றுக்கொள்ளாமல் நன்னன் அவளைக் கொலை புரிந்தான்

பெண்கொலை புரிந்த குற்றத்துக்காக நன்னன் நரகம்  (நிரையம்) அடைந்தான்

பெண்ணின் இன்பத்துக்குத் தடை நிற்கும் தன் தாயும் நன்னன் போல் நரகத்துக்குச் செல்ல வேண்டும் என்பது மகள் தலைவியின் விருப்பம்

இதனைத் தலைவி தோழியிடம் சொல்கிறாள் 



No comments:

Post a Comment