Pages

Sunday, 28 April 2019

குறுந்தொகை 291 Kurunthogai 291

மரத்தை வெட்டிச் சாய்த்துச் சுட்டு புனம் உருவாக்கினர்
அதில் விதைத்த தினை விளைந்திருந்தது
கொடிச்சி தன் கையில் வைத்திருந்த குளிர் என்னும் இசைக்கருவியில் ஓசை உண்டாக்கிக் கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டினாள்

குளிர் எழுப்பிய ஓசை அவள் குரல் ஒலி போல் இனிமையாக இருந்தது
எனவே கிளிகள் ஓடவில்லை
அதனால் அவள் நொந்தாள்
அழுதாள்

அழுத அவள் கண்கள் எப்படி இருந்தன
சுனையில் பூத்த குவளைப்பூ வண்டு மொய்க்க மலர்ந்து மழைத்துளியில் நனைந்தது போல் இருந்தது

தலைவன் தலைவிஇ பற்றிப் பாங்கனிடம் சொல்கிறான் 


மழைத்துளியில் நனைந்த குவளை

No comments:

Post a Comment