Pages

Tuesday, 23 April 2019

குறுந்தொகை 255 Kurunthogai 255

ஆண்யானை
யா மரத்தைக் குத்தி
அதன் நடுவில் சோறு போன்று இருக்கும் பகுதியைத்
தன் பெண்யானை கூட்டத்துக்கு ஊட்டி
அவற்றின் பசியைப் போக்குவதை

பொருள் ஈட்டித்
தன் கடமையை நிறைவேற்றச்
சென்றிருக்கும் அவர்
வழியில் காண்பார்

உன் நினைவு வரும்
விரைவில் திரும்புவார்

தோழி தலைவியிடம் சொல்கிறாள் 



No comments:

Post a Comment