Pages

Thursday, 1 December 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 371-380

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 371-380
38 ஊழ்



இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

நல்லூழ் ஊக்கம் உண்டாக்கும் நலியூழ் சோம்பல் தோன்றவரும் 371
செல்லூழ் அறிவைச் செவிடாக்கும் 372 தேடும் அறிவும் உள் அறிவே 373
செல்வம் தெளிவு நேர்கோட்டைச் சேர்க்கும் இரண்டு புள்ளிமுனை 374
நல்ல செயலும் தீதாகும் நன்றாம் நீநும் ஊழ்வலியால் 375

உள்ளே இருப்ப(து) ஊழ் ஆட்சி ஒதுக்கி வைத்தால் போகாது 376
அள்ளிக் கோடி தொகுத்தாலும் ஆகூழ் இன்றேல் துய்ப்பில்லை 377
துள்ளும் துப்பு இல்லாமல் துறப்பர் ஊட்டா ஊழாலே 378
கள்ளம் ஊழ்க்குக் கலங்காதே 379 காண்க ஊழின் பெருவலியை 380

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் \ போகூழால் தோன்றும் மடி. 371
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் \ ஆகலூழ் உற்றக் கடை. 372
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் \ உண்மை யறிவே மிகும். 373
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு \ தெள்ளிய ராதலும் வேறு. 374
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் \ நல்லவாம் செல்வம் செயற்கு. 375
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் \ சொரியினும் போகா தம. 376
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி \ தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 377
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால \ ஊட்டா கழியு மெனின். 378
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் \ அல்லற் படுவ தெவன். 379
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று \ சூழினுந் தான்முந் துறும். 380

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment