Pages

Tuesday, 29 November 2016

சிலப்பதிகாரம் Silappatikaram 2-4

கண்ணகியின் உறுப்புகளைக் கோவலன் பாராட்டுகிறான்.
  • பிறைநிலாவைத் தேவர்கள் போற்றும் வண்ணம் பெரியோனாகிய சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டு வளரச் செய்தார். (சிவபெருமான் மனைவி திருமகள். சிவபெருமான் சூடிக்கொண்டதால் திருமகளும் நிலாவும் உடன்பிறப்பு ஆயின.) அதனால், சிவபெருமான் தன் பிறைநிலாவை உனக்கு நெற்றியாகத் தந்திருக்கிறார்.
  • வென்று வந்தவருக்கு அரசன் படைக்கலம் வழங்கிப் பாராட்டும் பழக்கம் உண்டு ஆகையால், உருவம் இல்லாத காமன் தன்னை வென்ற உனக்குத் தன் வில்லாகிய கரும்பை இரண்டு புருவங்களாக வழங்கியிருக்கிறான்.
  • அமிழ்தம் கடையும்போது அமிழ்தம் தோன்றுவதற்கு முன்பு இந்திரன் எடுத்துக்கொண்ட வச்சிரப்படை தோன்றியதாகலின் அந்த வச்சிரப் படையை இந்திரன் உனக்கு இடையாக நல்கியிருக்கிறான்.
  • அறுமுகக் கடவுள் முருகப்பெருமான் உன்னைப் பெறும் முறைமை இல்லாதவன் ஆதலாலே தன் வேலை உனக்கு இரண்டு கண்களாக வழங்கியிருக்கிறான்.


இந்திரன் கையில் வச்சிரப் படை

பாடல்

குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின்,
பெரியோன் தருக திரு நுதல் ஆக என:
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவம் ஆக ஈக்க:
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல்
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என:
அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே
அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?

புகார்க் காண்டம் \ 2. மனையறம் படுத்த காதை
நிலைமண்டில ஆசிரியப் பா
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்


No comments:

Post a Comment