Pages

Thursday, 17 November 2016

சிலப்பதிகாரம் Silappatikaram 1-6

சினம் மிகுந்து வேலேந்திப் போரிட்டு, இமய மலையில் தன் புகழ் மிக்க வேங்கைச் சின்னத்தைப் பொறித்த செம்பியன் தன் ஆட்சிச் சக்கரத்தைத் தனக்கு நேர் யாரும் இல்லாமல் உருட்டுவானாகுக என வாழ்த்துவோம்.
 
பாடல் \ மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா \ சுரிதகம்

இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை            
உப்பாலைப் பொன் கோட்டு உழையதா எப்பாலும்
செரு மிகு சினம் வேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே.

1 \ 
மங்கல வாழ்த்துப் பாடல் \ 
திருமணத்தை வாழ்த்தும் பாடல் \ 
அரசனை வாழ்த்திப் பாடலை முடித்தல்

கி. பி. இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்


ஆட்சிச் சக்கரம்
ஆளும் ஆழி
இந்தக் காசில் வில் புலி இணைகயல் ஆகிய மூன்று ஆட்சிச் சின்னங்கள் உள்ளன. புலி சோழர் சின்னம். செம்பியன் புலிச் சின்னத்தை இமயமலையில் போர் வெற்றியின் அடையாளச் சின்னமாகப் பொறித்தான் 

No comments:

Post a Comment