Pages

Sunday, 27 November 2016

நாலடியார் Naladiyar 9

உண்ணான், ஒளி நிறான், ஓங்கு புகழ் செய்யான்,
துன்னு அருங் கேளிர் துயர் களையான், கொன்னே
வழங்கான் பொருள் காத்து இருப்பானேல், 'அஆ!
இழந்தான்' என்று எண்ணப்படும்.             

தன்னிடம் இருக்கும் செல்வத்தைக் கொண்டு
தானும் உண்ணாமல்,
உடுத்திப் பகட்டாமல்,
பிறருக்கு வழங்கிப் புகழைத் தேடாமல்,
நெருங்கிய உறவினரின் துயரத்தைப் போக்காமல்,
பயன்படுத்தாமல்
சும்மா வைத்துப் பாதுகாத்துக்கொண்டு
இருப்பானாகில்,
அ ஆ 
அப் பொருளை இழந்துவிட்டான் என்றே
பிறரால் எண்ணப்படும்.

பத்து - செல்வம் நிலையாமை
சமண முனிவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலடியார் என்னும் நூல்.
இதில் வெண்பா யாப்பில் அமைந்த நன்னெறிப் பாடல்கள் 400 உள்ளன.
காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்


செல்வம் 

No comments:

Post a Comment