Pages

Monday, 8 August 2016

பரிபாடல் திரட்டு Paripadal Annex 4

தமிழ் தெரிவு செய்யப்பட்ட மொழி அமைதி கொண்டது; மாட்சிமை பொருந்தியது; முத்தமிழ் என அமைந்துள்ளது. தென்னம் பொருப்பு என்னும் பொதியமலையின் தலைவன் பாண்டியன் போற்றுவது. அவன் குதிரைப்படை போல வையையில் புனல் பரந்து பாய்கிறது.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு
4. வையை

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
பரிமா நிரையின் பரந்தன்று வையை.

இப் பகுதி திருக்குறள் (23) பரிமேலழகர் உரையைப் பற்றிய 'நுண் பொருள் மாலை' யால் தெரிய வருகின்றது.
மேற்கோள் | தொல்காப்பியம் செய்யுளியல் சூத்திம் 121 பேராசிரியர் உரை, நச்சினார்கினியார் உரை                            
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment