Pages

Tuesday, 9 August 2016

பரிபாடல் திரட்டு Paripadal Annex 12

கொடை வழங்குபவர்களை உலகம் கொண்டாடும். கொடையை ஏற்பவர்களைக் கண்டு வழங்குவோர் மகிழ்வர். இந்த இரண்டும் மதுரையிலும் திருப்பரங்குன்றத்து முருகன் கோயிலிலும் நிகழும். இந்த இரண்டு இடங்களிலும் வாழ்வோரே வாழ்வார் எனப்படுவார். மற்றையாரில் தேவர் உலகம் செல்வார் யார்?

பாடல்சொல் பிரிப்புப் பதிவு

ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும்
சேய் மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றும்,
வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார்
போவார் ஆர், புத்தேள் உலகு

புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் உள்ளது
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment