Pages

Tuesday, 9 August 2016

பரிபாடல் திரட்டு Paripadal Annex 13

எது இனிது? வையைப் புனலில் நீராடுவதா? திருப்பரங்குன்றத்தை வழிபட்டுச் சுவைத்தலா? வேலின் நுனி போல் பாயும் கண்ணை உடைய இவளோடு நான் எதனைச் செய்து இன்புறுவேன்? இப்படி ஒருவனை மருளவைப்பது இந்த இடலகளுக்கு இயல்பு.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு

'வையை வருபுனல் ஆடல் இனிதுகொல்?
செவ் வேள் கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல்?
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணையாக
எவ்வாறு செய்வாம்கொல், யாம்?' என, நாளும்,
வழி மயக் குற்று மருடல் நெடியான் 5
நெடு மாடக் கூடற்கு இயல்பு.

இப் பகுதி தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 11 ஆம் சூத்திர உரையில் இளம் பூரணரால் காட்டப்பெற்றுள்ளது. இது பரிபாடலைச் சார்ந்ததாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment