Pages

Wednesday, 31 August 2016

கார் நாற்பது KarNarpatu 6

மா வடுவை இரண்டாகப் பிளந்து வைத்தது போன்ற கண்ணை உடையவளே! வருந்த வேண்டாம்.
வளையல் போட்டால் நிற்காமல் வழுவிக்கொண்டிருக்கும் உன் தோளைப் பார்த்து, இடி முழங்குகிறது; நீண்ட இடைவெளியில் சென்றிருக்கும் உன்னுடையவரை “காலத்தை நீட்டிக்காமல் திரும்பிவிடு” என்று அவருக்குச் சொல்வதாக முழங்குகிறது. தோழி தலைவியிடம் சொல்கிறாள்.
மாவடுப் பிளவு போன்ற கண்

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி,
வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்! வருந்தல்;
கடிது இடி வானம் உரறும், நெடு இடைச்
சென்றாரை, 'நீடல்மின்' என்று. 6

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

No comments:

Post a Comment