மா வடுவை இரண்டாகப் பிளந்து வைத்தது போன்ற
கண்ணை உடையவளே! வருந்த வேண்டாம்.
வளையல் போட்டால் நிற்காமல் வழுவிக்கொண்டிருக்கும்
உன் தோளைப் பார்த்து, இடி முழங்குகிறது; நீண்ட இடைவெளியில் சென்றிருக்கும் உன்னுடையவரை
“காலத்தை நீட்டிக்காமல் திரும்பிவிடு” என்று அவருக்குச் சொல்வதாக முழங்குகிறது. தோழி தலைவியிடம் சொல்கிறாள்.
![]() |
| மாவடுப் பிளவு போன்ற கண் |
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
தொடி இட ஆற்றா
தொலைந்த தோள் நோக்கி,
வடு இடைப் போழ்ந்து
அகன்ற கண்ணாய்! வருந்தல்;
கடிது இடி வானம்
உரறும், நெடு இடைச்
சென்றாரை, 'நீடல்மின்' என்று. 6
அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

No comments:
Post a Comment