பொருள் இல்லாதவன் என்று பிறர் சொல்வார்களே,
என்னும் சொல்லுக்குப் பயந்து பொருளீட்டச் சென்றுள்ளார்.
பகழி போல் உண் கண்ணாய்!
அவர் சொல்லிய காலத்தில் வருவதை சொல்பவை போல
மேய்கின்றன. முல்லை நிலத்தில் பவளம் சிதறிக் கிடப்பது போல மேய்கின்றன. பார்.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
இகழுநர் சொல் அஞ்சிச்
சென்றார் வருதல்
பகழிபோல் உண் கண்ணாய்! பொய்
அன்மை; ஈண்டைப்
பவழம் சிதறியவை போலக்
கோபம்
தவழும் தகைய புறவு. 5
அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

No comments:
Post a Comment