விளையாடும் மகளிர் போல மயில்கள் ஆடுகின்றன.
கொன்றை (கடுக்கை) பூத்துக் குலுங்குகிறது. பாடும் வண்டுகள் பூவில் ஊதும் ஒலியுடன் தேன்
உண்ணுகின்றன.
பணைத்தோளி!
அவர் சொல்லியபடி வந்துவிடுவார். உன் பசலை
நோயைத் தீர்க்கும் மருந்து இதுதான்.
![]() |
| பணைத்தோளி பருத்த தோளினை உடையவள் |
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
ஆடு மகளிரின் மஞ்ஞை
அணி கொள,
காடும் கடுக்கை கவின்
பெறப் பூத்தன;
பாடு வண்டு ஊதும்
பருவம், பணைத் தோளி!
வாடும் பசலை மருந்து. 4
அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

No comments:
Post a Comment